Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருக்குறள்-பதிவு-21


                      திருக்குறள்-பதிவு-21

இந்த உலகத்தில்
அதர்மம் தலைவிரித்து
ஆடும்போதெல்லாம்
அதர்மத்தை அழித்து
தர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
கடவுள் அவதாரம்
எடுக்கிறார்
ஒவ்வொரு காலகட்டத்திலும்
அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்டுவதற்கு
விஷ்ணு 10
அவதாரங்கள் எடுத்தார்
விஷ்ணுவின் பத்து
அவதாரங்களை
தசாவதாரம்
என அழைக்கிறோம்

உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
நம் முன்னோர்கள்
தசாவதாரத்தின்
மூலம் விளக்குகிறார்கள்

(1) மச்ச அவதாரம்

மச்சம் என்றால் மீன்
என்று பொருள்.
மீன் நீரில் வாழக்கூடிய
உயிரினம் ஆகும்

இந்த பிரபஞ்சத்தில்
உயிரினங்கள் முதன்
முதலில் நீரில்
இருந்து தான்
தோன்றியது

மீன் நீரில்
வாழும் உயிரினம் ஆகும்
இதனைக் குறிப்பது தான்
மச்ச அவதாரம்.

(2)கூர்ம அவதாரம்

கூர்மம் என்றால் ஆமை
என்று பொருள்.
ஆமை நீரிலும்,
நிலுத்திலும்
வாழக்கூடிய
உயிரினம் ஆகும்

நீரில் தோன்றிய
உயிரினம்
அடுத்து தரையில்
வாழ்வதற்கான
முயற்சிகளை
மேற்கொண்டாலும்
முழுவதுமாக
அதனால் தரையில்
வாழ முடியவில்லை
எனவே, நீரிலும்,
நிலத்திலும் வாழ்வதற்குரிய
தகவமைப்பைப் பெற்று
நீரிலும் நிலத்திலும்
வாழ்ந்தது

ஆமை நீரிலும்
நிலத்திலும் வாழும்
உயிரினம் ஆகும்
இதனைக் குறிப்பது தான்
கூர்ம அவதாரம்

(3)வராக அவதாரம்
வராகம் என்றால்
பன்றி என்று
பொருள்
பன்றி நிலத்தில்
வாழும் உயிரினம்
ஆகும்

நீரிலும் நிலத்திலும்
வாழ்ந்த உயிரினம்
நிலத்தில் மட்டுமே
வாழ்வதற்குரிய
முயற்சிகளை மேற்கொண்டு
நிலத்தில் மட்டுமே
வாழக்கூடிய நிலையை
அடைந்தது
நிலத்தில் மட்டும்
வாழ்ந்தாலும்
தன்னுடைய பழைய
நினைவின் தூண்டுதலினால்
அடிக்கடி போய் நீரில்
படுத்துக் கொள்கிறது
அதாவது பன்றி
சாக்கடையில் போய்
புரண்டு உருள்கிறது
பன்றிக்கு நீரில்
வாழ்ந்த பதிவு
இருக்கின்ற காரணத்தினால்
சாக்கடையில் அடிக்கடி
போய் படுத்துக்
கொள்கிறது

பன்றி நிலத்தில்
வாழும் உயிரினம்
ஆகும்
இதைக் குறிப்பது தான்
வராக அவதாரம்

(4)நரசிம்ம அவதாரம்
நர+சிம்மம்=நரசிம்மம்
நர என்றால் மனிதன்
என்று பொருள்
சிம்மம் என்றால்
சிங்கம் என்று பொருள்
நரசிம்மம் என்றால்
மனிதனும், சிங்கமும்
சேர்ந்தது என்று
பொருள்
அதாவது
நரசிம்மம் என்பதற்கு
மனிதன் உடலையும்
சிங்கத்தின் தலையையும்
கொண்ட உயிரினம்
என்று உருவகப்படுத்தி
இருக்கிறார்கள்
நம் முன்னோர்கள்

விலங்கானது
மனிதன் என்ற நிலையை
அடைவதற்கு முன்பாக
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு நிலை
இருக்கிறது
என்கிறார்கள்
நம் முன்னோர்கள்
அதைத் தான்
நரசிம்ம அவதாரமாக
காட்டி இருக்கிறார்கள்

நம் முன்னோர்களும்
சார்லஸ் டார்வினும்
இந்த இடத்தில்
தான் வேறுபடுகிறார்கள்

சார்லஸ் டார்வின்
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்கிறார்
அதாவது
விலங்கிலிருந்து
மனிதன்
வந்தான் என்கிறார்
ஆனால்
நம் முன்னோர்கள்
விலங்கிலிருந்து
மனிதன் வரவில்லை
விலங்கிலிருந்து
மனிதன் வருவதற்கு
முன்பாக இடையில்
ஒரு உயிரினம்
இருக்கிறது
அது தான்
மனிதனும், விலங்கும்
சேர்ந்த ஒரு நிலை
என்று உருவகப்படுத்தி
இருக்கிறார்கள்
அதைத் தான்
நரசிம்ம அவதாரமாக
நமக்கு சுட்டிக்
காட்டியிருக்கிறார்கள்

நம் முன்னோர்களும்
சார்லஸ் டார்வினும்
வேறு பட்டு
நிற்கும் நிலையினை
ஆராய்வோம்

--------- இன்னும் வரும்
---------- 18-09-2018
////////////////////////////////////////////////


Share the post

திருக்குறள்-பதிவு-21

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×