Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நவிபிள்ளையை நானும் சந்திப்பேன்: எழிலன் மனைவி


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும், வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரனுடன் சந்திக்கவுள்ளதாக அனந்தி சசிகரன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, முன்னாள் போராளி எழிலனின் மனைவியாகிய தன்னை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சந்திப்பின் போது, போரின் சாட்சியங்களா இருக்கும் தாங்கள், காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன்' என்று அவர் மேலும் கூறினார்


This post first appeared on TNRZAHIR, please read the originial post: here

Share the post

நவிபிள்ளையை நானும் சந்திப்பேன்: எழிலன் மனைவி

×

Subscribe to Tnrzahir

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×