Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வறுமையின் மூண்று நிறங்கள்

 இன்று கானொளியில் 3Shades என்ற குறும்படத்தை பார்த்தேன். அந்த படம் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.   

நம் உள்ளங்கைகளுக்குள் உலகம் வந்துவிட்டதாக  நாம்  நம்பிக்கொண்டிருக்கிறோம். அது ஒரளவு உண்மையும் கூட. அதனாலேயே நாம் முன்னேறிவிட்டதாக அர்த்தம் கிடையாது.

                                இன்னும் நம் நாட்டில் அடுத்த வேளை உணவு, நிச்சயம் இல்லாத நிலையில்தான் கோடிக் கணக்கான மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருப்பது, சந்தேகத்திற்கிடமில்லாமல் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். இன்னும் கூட நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

                               அடிப்படை தேவைகள் கூட கிடைகாத மக்களின், உயர்வுதான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம். நாம் தினமும் பயனிக்கும் சாலையில், எத்தனையோ சிறுவர்களை நாம் காண்கிறோம். பிச்சை எடுப்பவர்களாக, சின்ன சின்ன பொருட்களை விற்பவர்களாக நாம் பார்க்கிறோம். எப்பொழுதாவது இவர்கள் யார்? எங்கே வசிக்கிறார்கள்? ஏன் இவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை? இவர்களுக்கு பொற்றோர்கள் இருக்கிறார்களா? என்று நாம் சிந்தித்து இருக்கிறோமா?

                                  இந்த குறும்படத்தை பார்த்தப் பிறகு, சாலையோர சிறுவர்களை பார்க்கும் போது நிச்சயமாக இந்த கேள்விகள் உங்கள் மனதில் எழும்.

                               
 படத்தின் துவக்கத்தில் ஒரு சிறுவன் சிக்னலுக்கு அருகே, சுவரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். ஜனவரி 26 என்று திரையில் வருகிறது. அதே சிக்னலில் ஒரு பிச்சைகாரன், சிக்னலில் நிற்கும் வாகனங்களில் பிச்சை கேட்கிறான். யாரும் பிச்சையிடவில்லை. பிறகு இந்த சிறுவன் தேசியக் கொடியை விற்கிறான். குடியரசு தினம் என்பதால் எல்லோரும் வாங்கிக் கொள்கிறார்கள்.

                                 இதை கவனிக்கும் பிச்சைகாரன், இரவு தனியாக செல்லும் சிறுவனை தாக்கி, பணத்தை பரித்துக் கொண்டுவிடுகிறான். இதை பார்க்கும் ஒரு இரவு காவளாளியும் தடுக்காமல் இருந்துவிடுகிறான். வீட்டில் பணம் திருடுப்போனதாக கூறும் மகனை நம்பாமல், அவனை அடித்து விரட்டிகிறார்.

                             பசியோடு வெளியே வரும் சிறுவன், சாலையோரக் கடையை சற்று நேரம் பார்த்துவிட்டு, குப்பைகளில் கிடந்த, காலை இவன் விற்ற கொடிகள் நிறைய கிடைக்கின்றன.
     
                           27 ஜனவரி,
                                     
அதே சிக்னல், தூக்கத்திலிருந்து எழுந்த சிறுவன். வாகனங்கள் நிற்பதைப் பார்த்து, கொடிகளை விற்க முயல்கிறான். ஒருவரும் வாங்கவில்லை. சிறுவன் பசியால் நடு சாலையில் அழுவதுடன் படம் நிறைவுப் பெறுகிறது.

                               5.46 நிமிடங்கள் ஓடும் இந்த படம், சிறுவனின் வறுமையை மட்டும் கூறவில்லை. எழைகள் என்றாலே குற்றச் செயலில், இடுப்படுவார்கள் என்ற ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. அதை இப்படம் உடைக்கிறது. அந்த வறுமையிலும் சிறுவன் திருடவும் இல்லை, பிச்சை எடுக்கவும் இல்லை.

                           இதில் வரும் இரவு காவலாளி, இந்த சமூகத்தை பிரதிபலிக்கிறான். நம் கண் முன்னே எந்த தவறு நடந்தாலும், இந்த காவலாளியைப் போல நாம் கண்டும் காணாமலும்தான் இருக்கிறோம்.

                          சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மட்டும் நாம் அதிக நாட்டுப்பற்றுடன் இருக்கிறோம். ஆனால் அவை அன்றைய இரவுவரைக் கூட இருப்பது இல்லை. கொடிகள் அனைத்தும் குப்பைக்கு போய்விடுகிறது.

                        நாளைய இந்தியாவின் நம்பிக்கைகளான சிறுவர்களை காக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

படத்தைக் கான   https://www.youtube.com/watch?v=TIFiVknKdPc



                     













                                  

Share the post

வறுமையின் மூண்று நிறங்கள்

×

Subscribe to ஒரு முட்டாளின் நாட்குறிப்பு

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×