Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

39 வது புத்தகக் காட்சி 2016

வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் நடைப்பெற்றது. சென்னையில் இருந்தவரை எங்கு நடந்தாலும், சென்று வருவது எனக்கு கடினமாக இருக்காது. சென்னை எனக்கு சொந்த ஊரைப்போன்றது, சொல்லப்போனால் சொந்த ஊரைக் காட்டிலும் சென்னையைப்பற்றி அதிகமாகவே தெரியும். சொந்த ஊருக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றது இன்றுவரை நான் ஏன் சென்னையைவிட்டு வந்தேன் என்றே தெரியவில்லை.

இந்தமுறை என் சொந்த ஊரான ஆரணியிலிருந்து (திருவண்ணாமலை மாவட்டம்) தீவுத்திடலை வந்தடைவதற்குள்ளாகவே மிகுந்த கலைப்படைந்துவிடேன். வெயில் என்னை மேலும் கலைப்படையச் செய்தது. மொத்தம் இரண்டரை மணி நேரம் அரங்குகளைப் பார்த்தேன். மேலோட்டமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. சின் புத்தகங்களை வங்கினேன். பெரிய பதிப்பகங்களை இந்த முறை தவிர்த்துவிட்டு, சிறிய பதிபகங்களில் புத்தகங்களை வாங்கினேன். பெரிய பதிப்பகங்களின் புத்தகங்களையும் சிறியப் பதிப்பகங்களிலேயே வங்கினேன்.

சென்னையில் எனக்கு எப்பொழுதுமே சவாலாக இருப்பது கழிவறையைக் கண்டுப்பிடிப்பதுதான். இந்தமுறையும் சவாலாகவே இருந்தது. ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வந்துப் போகும் சென்னையில் சரியான, சுகாதாரமான் பொதுக் கழிவறைகள் இல்லாதது மிகப்பெரியக் குறை.

கடைசி நாளுக்கு முந்தைய நாள் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருன்ந்தது. புத்தக அரங்கைவிட உணவு அரங்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீவுத்திடல் என்றதும் பொருட்காட்சி என்று நினைத்து வந்துவிடார்களோ என்று தோன்றியது. நிறைய இளைஞர்கள், குழந்தைகளை பார்த்தது சந்தோசமாக இருந்த்தது.

நான் வாங்கிய புத்தகங்களில் பட்டியல்

1. ஊரார் வரைந்த ஓவியம் - துரை. குணா

2. கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும்
     நமக்கான் மாற்று ஊடகங்களும் -   கீற்று நந்தன்

3. அருந்ததியர்களாகிய நாங்கள் - ம. மதிவண்ணன்

4. இந்து ஆன்மிகமே பாசிசம்தான் 

5. இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் - மூவலூர் ஆ. இராமாமிர்தம்

6. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் - ஓவியம் புகழேந்தி

7. தமிழினி - ஒரு கூர்வாளின் நிழல்

8. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானா புகோகா

9. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் - யமுனா ராஜேந்திரன்

10. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகம் பிள்ளை

11. சார்லி சாப்ளின் - பி.பி கே. பொதுவால்

12. டாம் மாமாவின் குடிசை

13. அம்போத்கர் - சாதி ஒழிப்பு

14. அர்த்தமுள்ள இந்துமதம் 10 தொகுதிகளும்

பின் குறிப்பு சம்பவம் :

                                            இந்த பதிவிற்கும் இப்பொழுது நான் கூறப்போகும் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதே நாளில் நடந்ததாலும், சுவாரஸ்யம் மிகுந்தது என்பதாலும் சொல்லுகிறேன்.


கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆரணி செல்லும் பேருந்தில் அமர்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது, வேலூர் பேருந்திற்காக ஒரு இளம் பெண் நின்றுக்கொண்டிருந்தார். எப்படியும் ஒரு 20 வயது தான் இருக்கும். ஆரஞ்சு நிறச் சுடிதார் பச்சை நிற பார்டர். வெள்ளை லெக்கின்ஸ். வெள்ளை துப்பட்டா, பச்சை நிற வார் உடைய செருப்பு, ஆரஞ்சு கம்மல், கழுத்தில் மெல்லிசான சங்கிலி, எந்தவித ஒப்பனையும் இல்லாமல் மிக அழகாக இருந்தார்.

ஏதோ ஒரு ஈர்ப்பு அந்தப் பெண்ணிடத்தில் எனக்கு ஏற்பட்டது. நானும் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த்தேன். யாருக்காவோ காத்துக்கொண்டிருந்தார்.  நொடிக்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு இருந்த பெஞ்சில் உட்கார்ந்துக்கொண்டு கால் இரண்டையும் ஆட்டிக்கொண்டே ஏதோ ஒரு குளிர்பானத்தை குடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது, அந்தப் பெண்ணிடம் எனக்கு பிடித்தது அந்த பெண்ணின் குழந்தைதனம். முகம் மட்டும் அல்ல, அந்த பெண்ணின் மனதும் குழந்தையுள்ளம் கொண்டதாகத்தான் இருக்கும். குழந்தைகள் மட்டும்தான் எந்த ஒப்பனையும் இல்லாமலே அழகாகத் தெரிவார்கள். என் பேருந்துக் கிளம்பும்வரை அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

Share the post

39 வது புத்தகக் காட்சி 2016

×

Subscribe to ஒரு முட்டாளின் நாட்குறிப்பு

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×